Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு ... ஒரே கல்லில் 20 கைகளுடன் பெருமாள் சிலை ஒரே கல்லில் 20 கைகளுடன் பெருமாள் சிலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லையம்பலத்தில் நடராஜர் ஆனந்த நடன மகா தரிசனம்
எழுத்தின் அளவு:
தில்லையம்பலத்தில் நடராஜர் ஆனந்த நடன மகா தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
10:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவத்தில் நேற்று, தில்லை அம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு நடராஜர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருத்தேரில் இருந்து இறங்கி, ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜ சபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று அதிகாலை 3:00 மணியளவில், சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் எழுந்தருaளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தீட்சிதர்கள் சித்சபையில் ரகசிய பூஜை செய்தனர். மதியம் 1:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, 2:15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பிற்பகல் 2:55 மணியளவில், ராஜ சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு மகா தரிசனம் தந்து, சித்சபை பிரவேசம் செய்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘பொன்னம்பலத்தானே; ஆடல் வல்லானே; தில்லை அம்பலத்தானே’ என கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar