Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு ... ஒரே கல்லில் 20 கைகளுடன் பெருமாள் சிலை ஒரே கல்லில் 20 கைகளுடன் பெருமாள் சிலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லையம்பலத்தில் நடராஜர் ஆனந்த நடன மகா தரிசனம்
எழுத்தின் அளவு:
தில்லையம்பலத்தில் நடராஜர் ஆனந்த நடன மகா தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
10:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவத்தில் நேற்று, தில்லை அம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு நடராஜர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருத்தேரில் இருந்து இறங்கி, ஆயிரங்கால் மண்டபம் முகப்பு ராஜ சபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று அதிகாலை 3:00 மணியளவில், சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் எழுந்தருaளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தீட்சிதர்கள் சித்சபையில் ரகசிய பூஜை செய்தனர். மதியம் 1:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, 2:15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. பிற்பகல் 2:55 மணியளவில், ராஜ சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு மகா தரிசனம் தந்து, சித்சபை பிரவேசம் செய்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘பொன்னம்பலத்தானே; ஆடல் வல்லானே; தில்லை அம்பலத்தானே’ என கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar