பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
11:06
அவிநாசி: திருமுருகன்பூண்டி சிற்பக்கூடத்தில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, 20 கைகளுடன் பெருமாள் சிலை, பக்தர்களை கவர்ந்துள்ளது. திருமுருகன்பூண்டியிலுள்ள சிற்பக்கலை கூடங்களில், உருவாக்கப்படும் சிற்பங்கள் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.இங்குள்ள ஒரு சிற்பக்கூடத்தில், ஒரே கல்லில், பெருமாள் சிலை, இருபது கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கைகளிலும் சங்கு, சக்கரம், ருத்ராட்சமாலை, பரசு, கத்தி, சூலம், வேல், கேடயம், மணி, விசிறி, அம்பு, நாகம், அங்குசம், குடை, வில், ஜெபமாலை என, இடம் பெற்றுள்ளன. இந்த சிற்பம், 6.5 அடி உயரம், 2 டன் எடை கொண்டது. இது குறித்து ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது:பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள கோவிலுக்காக, இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையில், மொத்தம், 20 கைகளுடன் காட்சியளிக்கிறார். ஆறு மாதம் காலம் இந்த சிலை உருவாக்கப்பட்டது, என்றார்.