திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள மகாளேஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கணபதி வழிபாடு, மதுசுந்தரநாயகி சமேத மாகாளேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, கலச பூஜை, மகா தீபாரதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி-நடராஜமூர்த்தி மகா அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.