சிதம்பரம்: ஆனி திருமஞ்சன தரிசனத்தையொட்டி நந்தனார் சுவாமி வீதியுலா சிதம்பரதத்தில் நடந்தது. சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகம், நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில், நாளை போவார் என்னும் நந்தனார் சுவாமி வீதியுலா நடந்தது. அதனையொட்டி ஓமக்குளம் நந்தனார் மடம் சவுந்திரநாயகி அம்மன் சமேத சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரானை நடந்தது.தொடர்ந்து நந்தனார் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நடராஜர் தேரோடும் நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் மடாதிபதி பழனிவேல், நந்தனார் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் சங்கரன். இளங்கோவன், தொழிலதிபர் மணிரத்தினம், இளைய அன்பழகன், ஜெயச்சந்திரன், வினோபா உட்பட பலர் பங்கேற்றனர்.