பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
12:06
கரூர்: கரூரில், பஞ்சலிங்க சிவாலயங்களில், முதன்மையானது கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். அதற்கு அடுத்தபடியாக, கரூர் நகரின் ஈசானி பகுதியில் ஐந்து ரோட்டில் உள்ள, அமராவதி ஆற்றங்கரை மேற்புறத்தில் அமைந்துள்ள கோடீஸ்வரா கோவில் என்று கரூவூர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 40 ஆண்டுகளுக்கு மேலாக போதிய பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகளாக பக்தர்களில் முயற்சியால், கோவில் திருப்பணிகள் நடந்தன. இதில், கோடீஸ்வரசுவாமி, பாலாம்பிகை உட்பட பல்வேறு சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூலை, 2ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:30 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷகம் நடக்கிறது.