பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
நாமக்கல்: நாமக்கல், மகரிஷி நகர், சிந்தாமணி வல்லப கணபதி கோவிலில், எட்டாம் ஆண்டு பெருவிழா நடக்கிறது. நாமக்கல் அடுத்த, வகுரம்பட்டி பஞ்., மகரிஷி நகர், சிந்தாமணி கணபதி கோவிலில், எட்டாம் ஆண்டு பெருவிழா வரும், ?ல் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி; 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி மகா கணபதி யாகம் நடக்கவுள்ளது. மாலை, 6:30 மணிக்கு, ஆன்மிக வேள்வி அமைப்பாளர், அரசு பரமேஸ்வரன் தலைமையில் சொற்பொழிவு; மாலை, 7:30 மணிக்கு மங்கள ஆராத்தி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.