பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
மூங்கில்துறைப்பட்டு: அரும்பராம்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த அரும்பராம்பட்டில் உள்ள மகாசக்தி மாரியம்மன், விநாயகர், ஆதிலிங்கேஸ்வரர், புளிந்தீஸ்வரர் நவகிரஹ மூர்த்திகள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஒரு ஆண்டு நிறைவு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அனுக்ஞை ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை, மஹா கணபதி ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு யாகபூஜை, கோ பூஜை, சூரிய கும்ப பூஜை, சிலைகளுக்கு வலுவூட்டல் மற்றும் உயிரூட்டல், மூலிகை யாகம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாரதனை காண்பித்தனர். பின்பு நேற்று காலை 9:00 மணிக்கு குடம் புறப்பட்டு, 9:30 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் கலசத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டன. இவ்விழாவில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.