Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடனபாதேஸ்வரர் கோவிலில் ... திரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம் திரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் ஆகம விதி மீறலா? ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு
எழுத்தின் அளவு:
கோவிலில் ஆகம விதி மீறலா? ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
10:06

திருச்சி:ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதம், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் வந்து சென்றனர். தொடர்ந்து, மே, 24ல், ரெங்கநாதர் கோவில் மூலஸ்தானத்துக்குள், செருப்பு வீசியதாக, ஒருவர் பிடிபட்டார்.

பக்தர்கள் அதிர்ச்சி: அடுத்து, 26ம் தேதி, வசந்த உற்சவத்தின் போது, நம்பெருமாள் எழுந்தருளும் வெட்டிவேர் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஆகம விதிகள் மீறப்படுவதாக, குற்றம் சாட்டிய ஸ்ரீரங்கம் ஆலய மீட்புக் குழுவினர், ஸ்ரீரங்கத்தில், கண்டன பொதுக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும், பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா ஆகி யோர்,ஆகம விதிகளுக்கு முரணாக செயல்படும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என, வலியுறுத்தினர். கடந்த, 22ம் தேதி, ஸ்ரீரங்கத்துக்கு வந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரெங்கநாதர் கோவில் முன், பூர்ண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளித்தனர். அப்போது, அர்ச்சகர்கள் நெற்றியில் இட்ட சந்தனத்தை, உடனடியாக ஸ்டாலின், சால்வையால் அழித்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால், கோவிலில் மீண்டும் ஆகம விதிகள் மீறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து, தலைமை அர்ச்சகர் முரளிதரபட்டர் கூறியதாவது:ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதி கள் மீறப்படுவதாக சிலர் குற்றம் சாட்டு கின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றிய கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்த குற்றசாட்டை மையப் படுத்தி, பொதுக்கூட்டமும் நடத்தி உள்ளனர். குற்றச்சாட்டில், எவ்வித உண்மையும் கிடை யாது. கோவிலில் ஆகம விதிகள் மீறப்பட வில்லை. மீறப்படுவதாக கூறுபவர்கள் அதை நிரூபிக்கட்டும். கோவில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறை வெளியேற வேண்டும், என கூறுபவர்களுக்கும் இடையே பிரச்னைகள் இருக்கலாம். அதை வைத்து, ஆகம விதிகள் மீறப்படுவதாக கூறு வது தவறு. இதனால், கைங்கர்யம் செய்பவர் கள் மன வேதனை அடைகின்றனர். இது பற்றி, அறநிலையத்துறை ஆணையரி டமும், நிர்வாகக் குழு தலைவரிடமும் தெரி விக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar