பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
11:06
வெங்கூர்: திருப்போரூர் வட்டம், வெங்கூர் கிராமத்தில், பல்லவ கால பெருமாள் கோவில் உள்ளது. இதற்கான அடையாளமாக அப்பகுதியில் பழங்கால துாண்கள் அமைந்துள்ளன. பழங்கால கோவில் இருந்த இடத்தில், புதிதாக லட்சுமி நாராயண பெருமாள் கோவிலும், விநாயகர், துர்கை, துலுக்காணத்தம்மன், கங்கையம்மன், கன்னியம்மன் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவில் விமானங்களுக்கும், மூலவர் சன்னதிகளுக்கும் கலச நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. மாமல்லபுரம் அடுத்த பவழக்காரன் சந்திரத்தில், நுாற்றாண்டுகள் கடந்த, கெங்கையம்மன் கோவில் உள்ளது. கிராம பொதுக்கோவிலான இக்கோவிலில், திருப்பணிகள் செய்யப்பட்டதை அடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று காலை, நான்காம் கால வழிபாட்டைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்தி, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.