பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
11:06
பேரூர்: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. பொது உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், 57 லட்சத்து, மூன்றாயிரத்து, 998 ரூபாய் இருந்தது. அன்னதான உண்டியலில், 3 லட்சத்து, 15 ஆயிரத்து, 911 ரூபாய், கோசாலை உண்டியலில், ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 413 ரூபாய் இருந்தது. திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 195 ரூபாய் இருந்தது. இதுதவிர, 160 கிராம் தங்கம், 2419 கிராம் வெள்ளி இருந்தன.உண்டியல் எண்ணும் பணியில், சவுடாம்பிகை கல்லுாரி மாணவர்கள், மருத மலை சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.