பதிவு செய்த நாள்
27
ஜூன்
2018
10:06
பழநி, உலகநலன் வேண்டி பழநி முருகன்கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, சிறப்பு யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது.
பழநி முருகன் மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவருக்கு 108 சங்குபுனிநீர் அபிஷேகம் செய்து, வில்வம் கலந்த சுத்தஅன்னம் மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டியும், பாதங்களில் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. சித்தநாதன் அன்சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, செந்தில்குமார், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ( ஜூன் 27ல்) திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 28ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 29ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகவிழா நடக்கிறது.