அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே வடுகபட்டி நவநீத கிருஷ்ணன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கிருஷ்ணனுக்கு ஏழு வகை அபிஷேகங்கள், அலங்காரம், தீபா ராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில் பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.