திருநகர், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் பிரதிஷ்டை தின விழா நடந்தது. காலையில் சிறப்பு யாகசாலை பூஜை முடிந்து மூலவர்கள், உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மாலையில் உற்சவர்கள் திருமணக் கோல அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது.