பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
01:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதை, நேர் அண்ணாமலை கோவில் அருகே, ஆந்திர மாநிலம், பொக்குல கொண்ட கைலாச ஆசிரம பீடாதிபதி யோகிஸ்வரா மவுன, நிர்வாண திகம்பரி ஷட்டகோபி சுவாமியார் உள்ளார். இவர், உலக நன்மைக்கு, 61 நாள் சோமருத்ர யாகத்தை, நேற்று துவங்கினார். தினமும் காலை, 6:00 மணி முதல், 8:00 வரை, மாலை, 4:00 முதல், 6:00 வரை என, 61 நாட்கள், இந்த யாகம் நடக்கிறது. இதுபோல, 213 யாகங்கள், இதுவரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.