Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுகவனேஸ்வரர் கோவில் தேரை பாதுகாக்க ... திருமழிசை பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் திருமழிசை பெருமாள் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் 1000 பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவகங்கையில் 1000 பொங்கல் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2018
10:06

சிவகங்கை, சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடும் திருவிழா நடந்தது.சிவகங்கை அருகே இடையமேலுார் நாச்சத்தம்மாள் கோயில் ஆனி களரி திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.

இடையமேலுார், ஏனாதி, பூவந்தி, சுண்ணாம்பூர், தத்தனேந்தல், மணல்மேடு, சோழவந்தான், ஊத்துக்குளி பகுதிகளில் வசிக்கும் பங்காளிகள் இத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதால் ஒருவாரமாக காடுகளில் விறகு சேகரித்தல், பனை மட்டை, மண் பானைகள், பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தனர்.நேற்று காலை ஒரு பெரிய பானையை சுற்றி 5 சிறிய பானைகளை கட்டி வைத்தனர். மாலை 5:30 மணிக்கு கோயில் வீடு முன், பங்காளிக்கு ஒருவர் வீதம் 15 பேர் சாமியாடினர். மந்தை சாவடியில் இருந்து மண்பானைகளை பெண்கள் சுமந்து கோயிலுக்கு சென்றனர். பொங்கல் பொருட்களை பனைபெட்டியில் எடுத்து சென்றனர்.கோயிலுக்கு முன்பாக ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். தண்ணீர் எடுத்தல் போன்ற அனைத்து தேவைக்கும் மண் பானையையே பயன்படுத்தினர். தொடர்ந்து கோரைக்கிழங்கை தோண்டி அம்மனுக்கு படைத்தனர். இரவு முழுவதும் நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இன்று காலை ஆடுகளை பலியிட்டு, காளாஞ்சி வழங்குவர்.கிராமமக்கள் கூறுகையில், திருமண வரம், குழந்தை பாக்கியம் கேட்டு இத்திருவிழாவை கொண்டாடுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுவதால் வெளியூர்களில் இருக்கும் அனைவரும் வந்துவிடுவர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar