பதிவு செய்த நாள்
30
ஜூன்
2018
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பவுர்ணமி முடிந்ததும், மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், 76 லட்சத்து, 62 ஆயிரத்து, 864 ரூபாய், தங்கம் 164 கிராம், வெள்ளி, 6,512 கிராம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.