வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில், நேற்று முன் தினம் மாலை , 6:00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.