Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை மசராயன் கோவில் உற்சவத் திருவிழா கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வருஷாபிஷேகம் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் அலுவலகத்தில் தீ: சிலை மோசடியை மறைக்க சதி
எழுத்தின் அளவு:
பழநி கோயில் அலுவலகத்தில் தீ: சிலை மோசடியை மறைக்க சதி

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2018
11:07

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் மின்கசிவால் தீப்பிடித்து பீரோக்கள், ஆவணங்கள் சேதம் அடைந்தன. சிலை மோசடி விசாரணையை முடக்க நடந்த சதியா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.

பழநி மலை அடிவாரத்தில் கோயில் நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு தீப்பிடித்தது. தீயணைப்புதுறையினர், கோயில்  பணியாளர்கள் இணைந்து தீயை அணைத்தனர். இதில் நான்கு ‘ஏசி’க்கள் எரிந்தன. நாற்காலிகள், நான்கு பீரோக்கள், ஆவணங்கள், சேதம் அடைந்துள்ளன. இக்கோயிலில் உற்ஸவர் சிலை மோசடி குறித்து விசாரணை நடக்கும் நிலையில் இது விபத்தா, ஆவணங்களை அழிக்க நடந்த சதியா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ஏசி’யில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டது. பீரோவில் டெண்டர் தொடர்பான ரசீதுகள் இருந்தன. மற்ற ஆவணங்கள் எரியவில்லை’’ என்றார்.

இதுகுறித்து இந்துமக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் ராமரவிக்குமார் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து ஐ.ஜி., பொன்மாணிக்க வேலை மாற்றக் கூடாது. பழநி சிலைமோசடி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சிலை மோசடி விசாரணை நடக்கும்போது, முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டதாக கூறுகின்றனர். இது விபத்தா அல்லது சதியா என சந்தேகம் உள்ளது, என்றார். இது சதியாக இருக்கலாம் என இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ஜெகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar