Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரமாகாளி அம்மன் கோவிலில் ... குப்பையில் கிடக்கும் பழங்கால கற்சிலைகள் குப்பையில் கிடக்கும் பழங்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நூற்றாண்டு சிவன் கோவில் பாதுகாக்க தொல்லியல் துறை பரிந்துரை
எழுத்தின் அளவு:
13ம் நூற்றாண்டு சிவன் கோவில் பாதுகாக்க தொல்லியல் துறை பரிந்துரை

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
11:07

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் அருகே, 13 ம் நுாற்றாண்டு சிவன், பெருமாள் கோவில்கள் சிதிலமடைந்து உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசுக்கு தொல்லியல் துறை பரிந்துரை செய்தது. இக்கோவில்கள், காளையார்கோவிலில் இருந்து, 10 கி.மீ.,ல் முடிக்கரை காட்டுப்பகுதியில் உள்ளன. இரு கோவில்களும், கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

சிவன் கோவிலில் அகத்தீஸ்வரர் சுவாமி, சொர்ணவள்ளி அம்மன், நந்தி சிலைகள் உள்ளன. அங்கிருந்த வீரமாகாளியம்மன் சிலையை, 25 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் வெளியே எடுத்து, தனிக்கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.அங்கிருந்து, 300 மீ., துாரத்தில், பெருமாள் கோவில் உள்ளது. உதாரப்பெருமாள், அலமேலுமங்கை உபயநாச்சியாள்அம்மன் சிலைகள் உள்ளன. கோவில் சிதிலமடைந்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன், அச்சிலைகளை வெளியே வைத்து உள்ளனர்.இரு கோவில்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பாண்டியர், சோழர் கால கல்வெட்டுகள் என தெரியவந்துள்ளது. தொல்லியல் துறையினர் கூறியதாவது: கோவில் கல்வெட்டுகளை, மூன்று கட்டமாக படியெடுத்தோம். முடிக்கரை, ஆரம்பக் கட்டத்தில், ஞானசம்பந்த நல்லுார் என்று அழைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் நினைவாகவே இந்த ஊர் உருவாகியிருக்கலாம். கல்வெட்டுகளை பார்க்கும் போது, கோவில்கள், 13ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்தால் தான், நிலவரம் தெரியும். முதற்கட்டமாக, சிவன் கோவிலை பாதுகாக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar