பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
11:07
பழநி : பழநி முருகன் கோயிலின் உற்சவர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கோயில் நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. பழநி கோயில் ஐம்பொன் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று கும்பகோணம் எடுத்துச் செல்லப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.
பழநி முருகன் கோவில், சிலை மோசடி வழக்கில் தொடர்புள்ள ஐம்பொன் சிலை, இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக் கப்பட உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், 2004ல், மூலவர் நவபாஷாண சிலையை மறைத்து, 220 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை வைத்தனர். அதில் தங்கம், வெள்ளி மோசடி செய்தது, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரணையில் தெரிந்தது.இது தொடர்பாக, ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா உட்பட, நான்கு பேரை கைது செய்தனர். அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால், வீட்டுக் காவலில் உள்ளார்.இந்த சிலையை, கும்பகோணம் நீதிமன்றத்தில், இன்று ஒப்படைக்க உள்ளனர்.சிலையை எடுத்து செல்வதற்கு முன்னதாக, சுப்ரமண்ய பூஜை, கும்ப கலசத்தில், சக்தி சேகரிப்பு யாக பூஜை ஆகியவை, மலைக் கோவில் பாரவேல் மண்டபத்தில் நடந்தது.