சிவகங்கை, சிவகங்கை காமராஜர் சாலை வீரமா காளியம்மன் கோயில் 64 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூன் 26 ல் கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் அம்மனுக்கு பூக்கரகம், அக்னிச்சட்டி எடுத்து சென்றனர். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஜூலை 13 ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.