பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
12:07
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக அலங்காரங்கள் நடந்தன. தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை, 5:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பின், மாலை, 5:30 மணிக்கு, நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், கடகத்துார் பச்சேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, அபிேஷகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.