திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2018 01:07
திருக்கோவிலுார்: உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவில் கும்பாபிஷேக விழா 7ம் தேதி வேத‚ திவ்ய பிரபந்தாதிகள் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய தினமான இன்று (11ம் தேதி) அதிகாலை 5:00மணிக்கு‚ புண்யாகவாசனம்‚ விஸ்வரூபம்‚ அக்னி ஆராதனம்‚ கும்ப ஆராதனம்‚ ததுத்த ஹாமங்கள்‚ மகா பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9:00 மணியில் இருந்து 9:30 மணிக்குள் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணிக்கு துவங்கி 10:30 மணிக்குள் லஷ்மிநாராயணன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.