Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் ... அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை
எழுத்தின் அளவு:
பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
11:07

தஞ்சாவூர்: பழநி முருகன் கோவிலின், சர்ச்சைக்குரிய உற்சவர் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.திண்டுக்கல், பழநி முருகன் கோவிலுக்கு, புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், சிலை வடிவமைத்ததில் முறைகேடுகள் நடந்தது தெரிந்தது. பழநி கோவில் முன்னாள் இணை கமிஷனர், ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, கோவில் துணை கமிஷனர், புகழேந்தி, அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர், தெய்வேந்திரன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் சிக்கிஉள்ள அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர், தனபால், வீட்டு காவலில், கும்பகோணத்தில் தங்கியுள்ளார்.பிரச்னைக்குரிய, முருகன் சிலையை, வழக்கு நடக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க, போலீசார் முடிவு செய்தனர்.கடந்த, 14 ஆண்டுகளாக, பழநி மலைக் கோவிலில், டபுள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைக்கு, நேற்று முன் தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு, கும்பகோணம் எடுத்து வரப்பட்டு, நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன், சிலை ஒப்படைக்கப்பட்டது. சிலையை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, சிலை அங்கு எடுத்து செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar