Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் ... அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் அரிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை
எழுத்தின் அளவு:
பாதுகாப்பு மையத்தில் பழநி முருகன் கோவில் சிலை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
11:07

தஞ்சாவூர்: பழநி முருகன் கோவிலின், சர்ச்சைக்குரிய உற்சவர் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.திண்டுக்கல், பழநி முருகன் கோவிலுக்கு, புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், சிலை வடிவமைத்ததில் முறைகேடுகள் நடந்தது தெரிந்தது. பழநி கோவில் முன்னாள் இணை கமிஷனர், ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, கோவில் துணை கமிஷனர், புகழேந்தி, அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர், தெய்வேந்திரன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் சிக்கிஉள்ள அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர், தனபால், வீட்டு காவலில், கும்பகோணத்தில் தங்கியுள்ளார்.பிரச்னைக்குரிய, முருகன் சிலையை, வழக்கு நடக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க, போலீசார் முடிவு செய்தனர்.கடந்த, 14 ஆண்டுகளாக, பழநி மலைக் கோவிலில், டபுள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைக்கு, நேற்று முன் தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு, கும்பகோணம் எடுத்து வரப்பட்டு, நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன், சிலை ஒப்படைக்கப்பட்டது. சிலையை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, சிலை அங்கு எடுத்து செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar