பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
11:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 21 நாட்களில், பக்தர்கள், 57.69 லட்சம் ரூபாய் ரொக்கம் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உண்டியல்களில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அந்த வகையில், 21 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் நேற்று (ஜூலை 12)ல் உண்டியல் திறக்கப்பட்டது.
கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி என தனித்தனியாக பிரித்து எண்ணினர். இதில், 57 லட்சத்து, 69 ஆயிரத்து, 834 ரூபாய் ரொக்கம், 645 கிராம் தங்கம், 5,715 கிராம் வெள்ளி ஆகியவைஇருந்தன.