சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில், சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 11:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகள், 9 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.
கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், புண்ணியாவாசனம் செய்யப்பட்டு வருண ஜெபம் மூலமந்திரம் ஓதப்பட்டது. கோயில் சிவாச்சாரியார்கள் 10 பேர் பூஜைகளை நடத்தினர்.