பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
12:07
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்சவர், உள்பிரகார வலம் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆத்தூர் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.