பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
12:07
திருத்தணி: தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், முருகன் கோவில் உட்பட, ஏழு உப கோவில்களில், அணையா விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. திருத்தணியில், முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என, மொத்தம், 29 கோவில்கள் உள்ளன. இவற்றில், அணையா விளக்கு அமைக்க, கோவில் நிர்வாகம், தீர்மானித்தது. அதற்காக, சென்னை பூம்புகாரில், ஒரு விளக்கு, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ‘ஆர்டர்’ செய்து, இந்த விளக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. முருகன் கோவில் அதிகாரி கூறியதாவது: இந்த விளக்கில், அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்றுவதற்கும், நெய், எண்ணெய் ஊற்றுவதற்கும் வசதியாக இருக்கும். திருத்தணி முருகன் கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், திருவாலங்காடு பத்ரகாளியம்மன், மத்துார், மகிஷாசுரமர்தினி அம்மன், திருப்பாச்சூர் வாசுசீஸ்வரர். மேலும், பெரியநாகபூண்டி நாதீஸ்வரர் மற்றும் திருத்தணி சுந்தர விநாயகர் ஆகிய, ஏழு கோவில்களில், 7 அணையா விளக்குகள் தயார் செய்து, கொண்டு வரப்பட்டு உள்ளன. ஓரிரு நாட்களில், கோவில்களில் அணையா விளக்கு பொருத்தப்படும்.