பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
01:07
திருப்பரங்குன்றம்;மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக மெகா சைஸ் காகிதகூழ், களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட்டால் ஆன சுவாமி, தலைவர்கள் சிலைகள், கொலு பொம்மைகள், கிறிஸ்துவ குடில்கள் தயாரிக்கின்றன.தற்போது விநாயகர் சதுர்த்திக்காக 3 முதல் 15 அடி உயரமுள்ள நரசிம்மர் கணபதி, மகா கணபதி, துவஜ கணபதி, பால கணபதி, சிம்மாசனம், லிங்க விநாயகர், அன்னம், ரிஷப விநாயகர்களுடன் இந்த ஆண்டு குழந்தையுடன் தாமரையின்மேல் சந்தான கணபதி, சிம்ம விநாயகர், விநாயகர் மடியில் முருகப்பெருமான், வீரவாள் விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில்காகிதகூழால் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் மெகா சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளன. விஜயகுமார் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக குடும்பத்துடன் சிலைகள் தயாரிக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு களிமண், காகித கூழ் மட்டுமே விநாயகர் சிலை தயாரிக்கிறேன். இதுபோன்ற பெரிய விநாயகர் சிலைகள் 50க்கும் மேல் தயாரிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க 10 முதல் 15 நாட்கள் ஆகும், என்றார்.