பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கங்கையம்மன் கோவில் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த, திடீர் சிலையால்,பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் பின்புறம் கங்கையம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி, நேற்று முன்தினம் காலை, கோவிலுக்கு வந்த போது, சன்னதி முன் ஒன்றரை அடி உயர சுவாமி சிலை இருந்தது.அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசார், விசாரணை நடத்தினர்.அதில், அப்பகுதி மகேந்திரன் என்பவர், அந்த சிலையை வாங்கி, வீட்டில் வழிபட்டதாகவும், குடும்பத்தினர், சுவாமி சிலை வீட்டில் வைக்கக் கூடாது எனக்கூறி, கோவிலில் விட்டு சென்றதும் தெரிய வந்தது.பரிசோதனையில், பித்தளை சிலை என்பது தெரிந்தது, தற்சமயம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.