பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
அந்தியூர்: குருநாதசுவாமி கோவில், ஆடி தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அந்தியூர் அருகேயுள்ள, புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவிலில், ஆடி தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கிறது. நடப்பாண்டு விழா, நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக, புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து, வனத்துக்கு சாமி சிலை, கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூச்சாட்டுதல் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதையடுத்து வரும், 25ல், கொடியேற்றம் நடக்கிறது. ஆக.,1 முதல், வனபூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஆக.,8ல் நடக்கிறது. அன்று முதல், புகழ் பெற்ற மாட்டுச் சந்தை, குதிரைச்சந்தை தொடங்குகிறது. ஆக.,15ல், பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.