பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
11:07
புதுச்சேரி: பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள சதானந்த விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 3ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து கடந்த 45 நாட்களாக மண்டல பூஜை நடந்து வருகிறது. மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, நேற்று மாலை முதற்கால ஹோமம், இரண்டாம் கால ஹோமம், 108 கலச பூஜை மற்றும் ருத்ரம், சுக்தம், புருஷ சுக்தம், நாராயண சுக்தம் ஆகிய வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. விழாவில், திருப்பணிக்குழு தலைவர் தேவநாதன், பிருந்தாவனம் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத் தலைவர் புருஷோத்தமன், துணைத் தலைவர் சுப்ராயன், செல்வகாந்தி, சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.