நுங்கம்பாக்கம்: சென்னை, நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயிலில். தக்ஷிணாயண புண்யகால பிரம்மோற்சவ விழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.