திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2018 11:07
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் வருடம் தோறும் ஆடித்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்š இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 9:45 மணிக்குšகொடியேற்றத்தை செண்பகபட்டர், கண்ணன் பட்டர், செந்தில்பட்டர், சாமிக்கண்ணு பட்டர் நடத்தி வைத்தனர். கொடியேற்றத்திற்கானšஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.