பதிவு செய்த நாள்
19
ஜூலை
2018
12:07
கொடுமுடி: அமராவதிப்புதூரில், அடி மாத பொங்கல் விழா, நேற்று முதல் தொடங்கியது. கொடுமுடி, கொளத்துப்பாளையம், அமராவதிப்புதூரில் மாசாணி அம்மன், வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவில் ஆடி மாத பொங்கல் விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து கரகம் பாலித்தல், கம்பம் நடுதல், மகா தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, பச்சை பூஜை நடந்தது. நாளை, 5:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், திருவிளக்கு வழிபாடு, பச்சை பூஜை தீபாராதனை நடக்கிறது. வரும், 21ல் கனிவகை அலங்காரம், 22ல் 7:30க்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஊஞ்சலூர் மகா மாரியம்மன் எதிரே உள்ள காவேரி ஆற்றங்கரையில் தீர்த்தம், பால்குடம், கரகம், மேள தாளத்துடன் அழைத்து வருதல் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அபிஷேகம், மதியம், 2:00 பொங்கல், மாவிளக்கு பூஜை, மாலை, 5:30க்கு காப்பு அவிழ்த்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதல், ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது. வரும், 23ல், அபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.