திருப்பூர் : திருப்பூர் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான சுக்ரீஸ்வரர் கோவிலில் நாளை (20ம் தேதி) திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையத்தில், ஆவுடைநாயகி அம்பாள் சமேத, ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், நாளை (20ம் தேதி) திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம், 12:00 க்கு, சுவாமிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.