மானாமதுரை:மானாமதுரை வீரஅழகர்கோயில் ஆடிபிரமோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மானாமதுரை வீரஅழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் ஆடி பிரமோற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு நேற்று காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமி ஹனுமார்,கருடன், சேஷ, குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிக ளான திருக்கல்யணம் வரும் 24ந் தேதியும், தேரோட்டம் வரும் 27ந் தேதியும், தீர்த்தவாரி 28ந் தேதியும் நடைபெற உள்ளது. 3 ந் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபிமாதவன்(எ)முத்துச்சாமி ஸ்தானீகர் பாபுஜி மற்றும் தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சரவணன்ஆகியோர் செய்து வருகின்றனர்.