அம்மனுக்கு பச்ச மஞ்சள் அரைத்த பெண்கள்: இன்று மஞ்சள் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2018 11:07
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் அம்மனை குளிர்விப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக பெண்கள் முந்தைய நாளிலிருந்தே அம்மியில் மஞ்சளை அரைக்க துவங்கினர். நேற்று கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 46 அம்மியில் 280 கிலோ மஞ்சள் அரைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். மொத்த மஞ்சளும் கையால் அரைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி, சரவணன், தேர்போகி பாண்டி, குணாபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.