பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
12:07
திருப்பூர் : ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, முனியப்பன் கோவிலில் இருந்து, சூலம் எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா, நடந்து வருகிறது. விழாவில், நேற்று, முனியப்பன் கோவில் இருந்து, சூலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், சூலம் எடுத்து வந்து, வழிபாடு நடத்தினர். அகிலாண்டேஸ்வரி, மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். வரும், 24ல், குண்டம் இறங்குதல் நடக்கவுள்ளதால், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மை அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம், குண்டத்துக்கு அக்னி இடுதல் போன்றவை நடக்கிறது.