துாக்கணாம்பாக்கம்,: பள்ளிப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. துாக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் 55வது ஆண்டு செடல் உற்சவம் கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. நேற்று காலை ஆராதனை முடிந்து, மதியம் குளக்கரைக்கு சென்று சக்தி கரகம் எடுத்து வருதல், மாலை செடல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று 21ம் தேதி மதியம் 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.