பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
சென்னை: ஆடி மாதம், 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவை, தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆடி மாதத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும், 108 அம்மன் கோவில் சுற்றுலாவை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, அம்மன் கோவில்கள் சுற்றுலாவை அறிவித்துள்ளது. ஆடி மாதம் முழுவதும், ஒவ்வொரு திங்கட்கிழமை காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு, 9:00 மணிக்கு, சென்னை வந்தடையும். அதேபோன்று, வியாழக்கிழமை புறப்பட்டு, திங்கள் கிழமை சென்னை வந்தடையும்.இதற்கான கட்டணமாக, ஒருவருக்கு, குளிர்சாதன வசதி இல்லா பேருந்தில், தனி அறையுடன், 8,500 ரூபாயும்; இருவர் தங்கும் அறையில், ஒருவருக்கு, 6,300 ரூபாயும்; சிறாருக்கு, 5,300 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா, ஆக., 9ம் தேதி புறப்பட்டு, ராமேஸ்வரம் தரிசனம் முடித்து, ஆக., 12ம் தேதி காலை, சென்னை வந்தடையும். இதற்கான கட்டணம், இருவர் தங்கும் அறையில், ஒருவருக்கு, 2,900 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது இல்லாமல், ஒரு நாள், சக்தி சுற்றுலாவை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏற்பாடு செய்து உள்ளது. அன்று காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 7:00 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், தரிசனம் செய்து, சென்னை திரும்பலாம். இதற்கான கட்டணம், குளிர்சாதன பேருந்தில், ஒரு நபருக்கு, 725 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா குறித்த தகவல்களுக்கு, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை நேரிலும், தொலைபேசி எண்கள், 044- - 2533 3333, 2533 3444, கட்டணமில்லா தொலைபேசி எண், 180042 531111 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தீதீதீ.ttஞீஞிணிணடூடிணஞு.ஞிணிட் என்ற இணையதளத்தின் மூலம், ’ஆன்லைன் புக்கிங்’ செய்யலாம். இவ்வாறு சுற்றுலாத்துறை அறிவித்து உள்ளது.