பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள, பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபி?ஷகம், தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.
பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். இதே போல், புதுப்பேட்டை ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி?ஷகம், வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தது. மேலும் ராசு வீதியில் உள்ள, துளுக்காணி மாரியம்மன் கோவிலில், பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர். நேற்று காலை முதல், பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கணேஷ் நகரில் உள்ள அரசமரத்து மஹா மாரியம்மன் கோவில், 15ம் ஆண்டு ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த, 17ல், அம்மனுக்கு விரதகாப்பு கட்டுதல் மற்றும் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. பர்கூர் பாரத கோவிலில் இருந்து பெண்கள், பால்குடங்கள் மற்றும் பூசாரிகள் பூ கரகம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.