பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
சின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி காலையில் பூலாநந்தபுரம் ராஜகம்பளம் மாரையநாயக்கர் வகையறாவினர்கலிப்பனம் செய்து கோயில் வளாகத்தை துாய்மை படுத்துகின்றனர். 11:30 மணிக்கு தலைமை அர்ச்சகர் திருமலைஜெயபால் முத்து கொடியேற்றி ஆடி சனிவார சிறப்பு பூஜைகள் துவங்கியது.
ஆக. 3 மதியம் 12:30 மணிக்கு சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள்3வது சனிவார சிறப்பு பூஜைகள் நிறைவடைந்தவுடன்,இரவு 12:00 மணிக்கு மஞ்சள் காப்பு சாத்துபடி நடக்கிறது. நல்லெண்ணெய், மூலிகை, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் தயார் செய்யப்பட்ட கலவை மூலவருக்கு சாத்தப்படும். மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக கொடுக்கப்படும் உருவம், அடுத்த ஆண்டு மஞ்சள் காப்பு சாத்துபடி வரை நீடிக்கும்.ஆக. 13ல் சோணை கருப்பணசாமி பொங்கல் விழா நடக்கும். இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது படையலிட்டு, கிடா விருந்து வழங்கப்படும். வெளியூர் பக்தர்களுக்காக தேனி, போடி, தேவாரம், கம்பத்தில் இருந்து குச்சனுாருக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.