பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
03:07
தர்மபுரி: ஆடிவெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்கும், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபி ?ஷகம் செய்யப்பட்டன. பின்னர், அம்மனுக்கு அஷ்டபுஜ துர்காம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது. 11:30 மணிக்கு பொதுமக்களின் நலனுக்காக சவுபாக்ய ?ஹாமம் நடந்தது. தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி புத்துநாகர் கோவிலில், திரளான பெண்கள் புற்றில் பால் ஊற்றியும், முட்டை உடைத்தும் வழிபட்டனர். மொடக்கேரி ஓம்சக்தி அம்மன்கோவில், வெளிப்பேட்டைதெரு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி., சாலை அங்காளம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.