திருப்புல்லாணி:திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுக்கு துணைக்கோயிலாக விளங்கும் புல்லாணி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் பொங்கலிட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூஜகர் அரியமுத்து செய்திருந்தார் ராமநாதபுரம் சமஸ்தான செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணண் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.