சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலம் ஆத்மநாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி மாலை 5:30 மணிக்குஆத்மநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.