பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
சேலம்: கோட்டை அழகிரிநாதர், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று முன்தினம் முதல், ஆடி ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு, அதிகாலை பூஜை, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அங்குள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபி ?ஷகம் செய்து, வெற்றிலை மாலை சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.