பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
வாழப்பாடி: வாழப்பாடி, செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா, ஆக., 8ல் தொடங்குகிறது. அதற்காக, மக்கள் நன்கொடையுடன், பழமையான மரத்தேருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் இரும்பு சக்கரங்கள், கோபுரம் புதுப்பிப்பு பணி நடந்தது. இதனால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த தேர்த்திருவிழா, 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது நடக்கிறது. மேலும், ஒரு லட்சம் ரூபாயில் தேர் திரைச்சீலை வாங்கப்பட்டுள்ளது. ஆக., 8ல் அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், கரகம் எடுத்தல், கிடா வெட்டுதல், தேர் நிலைபெயர்தல், 9ல், கோவிலிலிருந்து, அ.வாழப்பாடி ராஜவீதியில் தேரோட்டம், வைத்திபடையாச்சி தெருவில் நிலை நிறுத்தல், 10ல், சடையப்பக்கவுண்டர் தெருவில் தேர் நிலை நிறுத்தல், 11ல், தேர் கோவிலை அடைதல், 12ல், சத்தாபரணம், திருவீதியுலா, 13ல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.