பதிவு செய்த நாள்
23
ஜூலை
2018
12:07
ஆர்.கே.பேட்டை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், செவ்வாய்கிழமை பிறந்தது. முதல் செவ்வாய் மற்றும் முதல் வெள்ளிக்கிழமை, அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார், வெள்ளாத்துாரம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் இட்டனர். ஆடி வெள்ளியை ஒட்டி, பக்தர்கள், கோவில் வளாகத்தை வேப்பிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். பக்தர்கள் தங்களின் வீட்டு நுழைவாயில் மற்றும் பூஜை அறைகளை வேப்பிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். இதனால், கிராமங்களின் எட்டு திசைகளிலும் வேப்பிலை வாசம் நிறைந்திருந்தது.