Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 28 நாள் சாப்பிடாத அம்மன் கிளவி என்றால் என்ன? கிளவி என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பெண் வடிவ முருகன்!
எழுத்தின் அளவு:
பெண் வடிவ முருகன்!

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
03:07

முருகன் ஏந்தியிருக்கும் கொடி எது என்றால், சேவல் கொடி என்று பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், சேவலையே தாங்கிய முருகனைப் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. இவரை நாமக்கல் அருகிலுள்ள பேளுக்குறிச்சியில் தரிசிக்கலாம். ஓம் என்பது, படைப்புக்கு தேவையான மந்திரம். இதன் பொருள் தெரியாமல் பிரம்மா படைப்புத் தொழிலை செய்து வந்தார். ஒரு தொழில் செய்பவன், அதன் அடிப்படை தெரியாமல் செய்தால், அந்தத் தொழிலின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்திற்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்!

இதையறிந்த முருகன், பிரம்மாவிடம் சென்று, அந்த மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மாவுக்கு அதன் பொருள் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியோரிடமும் கேட்டார் முருகன். சரியான பதில் கிடைக்கவில்லை. படைப்பது, காப்பது, அழிப்பது ஆகிய முக்கிய முத்தொழில்களைச் செய்யும் இந்த மூவரையும், முருகன், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்து, மும்மூர்த்திகளின் தொழிலையும் அவரே மேற்கொண்டார். ஏனெனில், அவருக்கு அந்த மந்திரத்தின் பொருள் தெரியும். எல்லாம் நானே என்பது தான் அந்த மந்திரத்தின் எளிய பொருள்.. முருகன் தங்கிய தலம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள பேளுக்குறிச்சி கூவை மலை. இந்த இடத்தில், முருகனுக்கு, கோவில் கட்டினார் வள்ளல்களில் ஒருவரான, வல்வில் ஓரி. கூவை என்பது கழுகு போன்ற பெரிய பறவை. வானத்திலிருந்து கூவை மலையைப் பார்த்தால், கழுகு சிறகை விரித்திருப்பது போல காணப்படுவதால் இப்பெயர் வந்தது. சுவாமிக்கு, பழனியாண்டவர் எனப் பெயர். முருகன், பூலோகம் வரும் போது, அவரது கொடியில் இருந்த சேவலும் வந்து விட்டது. அதை முருகன் கையில் தாங்கிக் கொண்டார். இதனால், இங்குள்ள முருகனின் கையில் சேவல் கொடிக்கு பதிலாக, சேவலே இருப்பதைக் காணலாம். பழனியாண்டவரை நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று தரிசித்தால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால், பெண் வடிவமாகவும் காட்சி தருவது விசேஷத்திலும் விசேஷம். சக்தியும் - சிவனும் இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவம் என இதைக் கொள்ளலாம். எனவே, இவருக்கு சக்தி அதிகம். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலையைப் போலவே, பழனியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார், போகர் சித்தர்.

முருகன், வேடன் கோலத்தில் இருப்பதால், தலையில் கொண்டையும், வேங்கை மலர்க்கிரீடமும், கொன்றை மலரும், ருத்திராட்ச மாலையும் சூடியபடி இருக்கிறார். காலில், காலணி, வீரதண்டை அணிந்திருக்கிறார். இடது கையில், வேலும், இடுப்பில், கத்தியும், வலது கையில், வஜ்ரவேலும் தாங்கியிருக்கிறார். முருகனின் காவலரான இடும்பனுக்கு, பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கம். மலையடிவாரத்தில் யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை, யானைப்பாழி தீர்த்தம் என்பர். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இதிலுள்ள நீரை உடலில் தெளித்தால், தோல் மற்றும் எலும்பு நோய் நீங்கும் என்பர். நாமக்கல்லில் இருந்து சேர்ந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் சாலையில், 22 கி.மீ., துாரத்தில் பேளுக்குறிச்சி உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்தில் மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது. 240 படிகள் ஏறி செல்லலாம் அல்லது காரில் செல்லலாம். காலை, 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar